முற்றம் காப்போம் - பரப்புரைப் பயணம் அச்சிடுக
வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013 23:12

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013.(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது.

கீழ்கண்ட தொடர்வண்டி நிலையங்களில் பயணக்குழுவினரை வரவேற்க அந்தந்த ஊர்களில் உள்ள தமிழின உணர்வாளர்கள்,ஈழ ஆதரவு அரசியல் கட்சியினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கூடி வரவேற்று நிதியளித்து வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். தொடர்புக்கு: கா. தமிழ்வேங்கை, 94421 70011, 78713 57575.

OruRupee

 

Chennai Nagercoil

 

Nagercoil-Coimbatore