பேரறிவாளன் மீது தாக்குதல் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:15

செய்யாத குற்றத்திற்காக கடந்த 25 ஆண்டு காலத்திற்கு மேலாக வேலூர் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் சிறைவாசி ஒருவரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறையிலேயே பாதுகாப்பற்ற நிலை இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

படுகாயமடைந்த பேரறிவாளனுக்கு பரோல் விடுதலை கொடுத்து அவரது பெற்றோரின் பாதுகாப்பில் தக்க சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறோம்.