தமிழ்நாடு அமைந்த 60 ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்! |
![]() |
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 16:51 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கு உரியதான தமிழ்நாடு உருவான நாளை நாம் மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதிலும் குறிப்பாக இவ்வாண்டு, தமிழ்நாடு உருவாக்கப்பட்டு 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிறப்புமிக்க இந்நாளை தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும் தமிழகத் திருநாள் -- 60 என்ற பெயரில் நவம்பர் முதல் நாளில் தொடங்கி அம்மாதம் இறுதி வரை மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாட வேண்டும். கொடியேற்றியும் இனிப்பு வழங்கியும் மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தியும் கொண்டாடுமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக்கொள்கிறேன். |