கவியுலகப் பூஞ்சோலை கவியரங்கம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:10

1-05-2018 அன்று சென்னை தாம்பரம் எஸ்.ஜி.எஸ். திருமண மகாலில் கவியுலகப் பூஞ்சோலை அமைப்பின் சார்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற்றது. வந்திருந்தோரை ஒரத்தநாடு நெப்போலியன்  வரவேற்றார்.

அன்று காலை 9 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற 5 புதுக்கவிதை கவியரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, திரளான பெண் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பழ. நெடுமாறன் விருதுகள் வழங்கிச்  சிறப்பித்தார். கவியுலகப் பூஞ்சோலை அமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு  முற்ற நிதிக்காக ரூ. 1,000/- வழங்கப்பட்டது.