"பெருந்தலைவர் காமராசர்" விருது பழ. நெடுமாறனுக்கு தமிழக முதல்வர் வழங்கினார் |
![]() |
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 12:02 |
தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா 21-01-2019 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சிமொழி - பண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராசன் முன்னிலை வகித்தார். மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கடம்பூர் ராஜú, . பெஞ்சமின், செங்கோட்டையன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பெருந்தலைவர் காமராசர் விருதினை பழ. நெடுமாறன் அவர்களுக்கு வழங்கும் வகையில் பொன்னாடைப் போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து விருதினை வழங்கினார். |