வி.ஐ.டி. பல்கலைக்கழக பாவேந்தர் மன்றம் தொடக்க விழா அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2022 10:19

19.10.22 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்களான திரு. சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், திரு. ஜி.வி. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வந்திருந்த அனைவரையும் முனைவர் கு. வினோத்பாபு வரவேற்றார். பாவேந்தர் மன்றத்தினைத் தொடக்கி வைத்து “தமிழின் தொன்மையும் – தமிழர்தம் பெருமையும்” என்னும் தலைப்பில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார்.