தலைமுறையாகத் தொடரும் நட்புறவு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:53

அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் அவர்கள் நடத்திய பல்வேறு தமிழ் விழாக்களில் தமிழவேள் பி. டி. இராசன், தமிழ் மாமலை மறைமலை அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

set-02

அறநெறியண்ணலின் நூற்றாண்டு விழாவில் தமிழவேள் பி. டி. இராசனின் பேரன் பொ. தி. இரா. கமலவிசயராசன், மறைமலை அடிகளாரின் பேரன் முனைவர் மறை. தி. தாயுமானவன், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பேரன் முனைவர் கோ. வீரமணி, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களின் மகள் திருமதி.
ம. பொ. சி. மாதவி பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியது அந்த நட்புறவு தலைமுறையாகத் தொடர்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.