தமிழர்களே! வருக தஞ்சைக்கு - பேராசிரியர் அறிவரசன் |
![]() |
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 16:00 |
அக்கரை ஈழத்தில் நேர்ந்த அவலத்தை
நெஞ்சில் கனல்ஏந்தி நேராகச் சென்றிடுவோம் முள்ளிவாய்க் கால்நினைவு முற்றத்தைக் கண்டுநம் இன்றமிழ் உறவுகளை இரக்கமிலாச் சிங்களவர் கண்டு மனம்பதைத்துக் கலக்கமுடன் நீள்நிலத்தில் இன்றுள்ள வேற்றுமைகள் இல்லாமல் நாம்எல்லாம் தஞ்சையைச் சென்றடைவோம் "தமிழர்களே வருக''என முள்ளிவாய்க்கால் பின்னடைவால் தமிழ்வீரம் முடியவில்லை இனமானம் காத்திடவும் இனப்பகையை வீழ்த்திடவும் இணைந்திடுவோம் வாரீர் எழுந்து |