இலட்சம் அகதிகள் வீடு திரும்பினார்கள் அச்சிடுக
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:58

யாழ்ப்பாணம், சூன் 20: புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிறகு ஒர் இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ஐ.நா. அகதி கள் ஆணையாளர் அலுவலகம்; தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளவர்களே இவ்வாறு தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ள னர். தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் இருந்த 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். தங்கள் தாயகம் திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்கள் சென்னை யிலுள்ள ஐ.நா.அகதிகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அந்த ஆணையத்தைச் சோந்த அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்