2015 - ஜூன் 14 தஞ்சையில் - உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு |
![]() |
வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015 13:32 |
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக் குழுக் கூட்டம் 5-4-15 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தஞ்சை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
1. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வைப்புநிதியாக ரூ.1 கோடி திரட்டுவது எனவும் அதற்கு தாராளமாக உதவ முன்வருமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது. 2. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நூலகம் ஒன்று கட்டுவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு நிதியையும் நூல்களையும் வழங்க முன்வருமாறு அனைத்துத் தமிழர்களையும், உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது. 3. உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாட்டினை 2015ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடத்துவது என உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்கிறது. 4. உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் ஒன்றை வெளியிடுவது எனவும் அதற்கு விளம்பரங்கள் அளித்து உதவுமாறு தமிழ்நாட்டுத் தொழில் அதிபர் களையும், வணிகர்களையும் உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது. |