தமிழின் தொன்மை - முனைவர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை |
![]() |
புதன்கிழமை, 01 ஜூலை 2015 13:37 |
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்அகற்றும் - ஆங்கவற்றுள் புற இருளை நீக்குவது கதிரவன். அக இருளை நீக்குவது தமிழ் என்ற நிலையில், கதிரவனோடு இணைத்துத் தமிழைப் பேசுகிறது இப்பாடல். கதிரவனைப் போன்றது தமிழ். கதிரவன் என்றும் இருக்கும். தமிழும் என்றும் இருக்கும். கதிரவன் புறஇருளை மட்டும் நீக்குவான். தமிழ் அகஇருளை நீக்கும். மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின் பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் தொடக்கத்தில் குமரி மலை இருந்தது.பின்பு, குமரி ஆறு ஆயிற்று. கடல்கோள்களால் குமரி கடலாயிற்று. அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்கு மிடைய எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும். ஏழ்மதுரை நாடும் ஏழ் முன்பாலை நாடும் ஏழ் பின்பாலை நாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ்காரை நாடும், ஏழ்குறும்பனை நாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பெளவமென்றாரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள (11. 18-20) என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும். தொப்பூள் கொடி அறுபட்ட பிறப்பில் ஒலித்த குரல் தெற்கு ஆசியப் பகுதி இலங்கையில் வாழும் பூர்வீக இனமக்கள் ஈழத்தமிழர். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து வடபகுதியான யாழ்ப்பாண அரசாட்சி காலத்தில் தொன்மையாக வாழ்ந்த தமிழ்ப்பேசும் மக்கள். அப்போது கிழக்கில் வன்னி அரசாட்சியும் இருந்துள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அனுராதபுரம், ராஜரதா பகுதிகளில் மக்கள் பேசிய பிரகிருதி மொழி வடிவத்தில் தமிழாஸ் அல்லது தமிடாஸ் (Damelas or Damedas) சொற்களுக்குமான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போதைய புத்தக்கோவிலாகக் கருதப்படும் அனுராதபுரத்திலுள்ள டகினதுபா இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் மன்னன் ஈழரா (Elara) வின் சமாதியே என்ற அடையாள விவாதக் குறிப்பும் உண்டு. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பாலி மொழி வரலாற்றுக் காவியமான மகா வம்சத்தில் ஈழரா தமிழ் இன மரபு பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி. 2ஆம் நூற்றாண்டு சார்ந்த மட்பாண்ட சிதிலங்களின் அகழ்வாராய்ச்சி பூணகிரி, யாழ்ப்பாணத்தில் தமிழ் எழுத்துக்கள் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றன. இங்கு கிடைத்த குலப் பெயரான வேள (Vela) புராதன தமிழகத்தின் வேளிர் (Velir) பெயரோடு தொடர்புடையதாக உள்ளது. கி.மு. மூன்று முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குட்பட்ட சங்ககால தமிழ் இலக்கியத்தில் ஈழத்துபூதன் தேவனார் (Elathu poothan tevanar) வாழ்ந்த குறிப்பும் உள்ளது. எட்டாம் நூற்றாண்டின் அகழ்வாராய்ச்சியில் தமிழ் ஒதுக்கீட்டு குடியிருப்புகள் (Demel Kaballa) தமிழ் கிராமங்கள் (Demelart Valodemin) தமிழ் கிராமம், நிலம் (Demel - gem - bim) பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 9-10ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய பாண்டிய சோழ மன்னர்களின் ஆட்சியும் நடைபெற்றுள்ளது. இக்காலக்கட்டத்து தமிழ் இலக்கியங்கள் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பகுதி நிலப்பரப்பை ஈழம் என்று குறிப்பிடுகின்றது. இலங்கைத் தீவில் மன்னன் விஜயாவின் முதன்முதல் அரசாட்சி கி.மு. 486களில் நடந்துள்ளது. இது இத்தீவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிங்களவர்அரசாட்சியாக உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மன்னன் (Dutugemunu) வடபகுதியை ஆண்ட தமிழ் மன்னரான ஈழராவை தோற்கடித்து அந்த ஆடசிப் பகுதியை ஆக்ரமித்த வரலாறும் இதற்குண்டு. இதன்பின்னரே ஒரு சிங்கம் தன் வலது முன்காலில் ஒருவாளை ஏந்தியும், கூடவே சூரியன், சந்திரன் குறியீடுகளும் உள்ள சிங்கள இனத்திற்கான கொடியும் உருவாக்கப்பட்டது. சின்ஹா (Sinha) ஹீல (Hela) சொல்லாக்கங்களிலிருந்து சிங்களவர் என்பது சிங்கத்தின் மக்கள் என்ற பொருளாக்கத்தை கொண்டுள்ளது. இதன் எதிர்விளைவுதான் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் போராளிகளின் அடையாளமாக புலிகள் சொல்லாடல் முன்வந்தது. தமிழக பாரம்பரிய சோழர்களின் ஆட்சியும் புலிக்கொடியும் இதன்மூலம் வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. |