மக்கள் விசாரணைக்குழு அறிக்கை வெளியீடு |
![]() |
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:49 |
தூத்துக்குடி மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 உயிர்களையும் மேலும் தடியடியால் இருவரின் உயிர்களையும் தீக்கிரைக்கு ஒருவரையும் பலியாக்கிய மனிதநேயமற்ற அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையிலும், உண்மை நிலைகளை மக்களுக்கு அறிவிக்கவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்கானஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான உயர்திரு. கோல்சே பட்டீல் மற்றும் உயர்திரு. ஹரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர்கள் திரு. கமல்குமார் ஐ.பி.எஸ்., திரு. ஜேக்கப் புன்னூஸ் ஐ.பி.எஸ்., திரு. சிறீ குமார் ஐ.பி.எஸ்., ஒய்வு பெற்ற ஆட்சியர்கள் திருமிகு. எம்.ஜி. தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., திருமிகு. கிறித்துதாஸ்காந்தி, ஐ.ஏ.எஸ்., மருத்துவர் கே. மதிகரன், வழக்குரைஞர் கீதா இராமசேசன், திருமிகு. கீதா இராமநாதன், திருமிகு. மாயா தர்வாலா, மூத்த ஆலோசகர், பேராசிரியர் கல்பனா கண்ணபிரான், பேராசிரியர் சிவ் விஸ்வநாதன், திருமிகு பமீலா பிலிப்போஸ், திருமிகு. அமித் செங்குப்தா, திருமிகு. கவிதா முரளிதரன், மருத்துவர் சேவியர் சுரேஷ், முனைவர் வே.அ. இரமேசுநாதன், திருமிகு. டாம்தாமஸ், எழுத்தாளர் கவிதா கஜேந்திரன் மற்றும் முனைவர் தீபக் நாதன் ஆகியோர் உள்ளடங்கிய உயர்மட்ட கள ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது. |