பழ. கோமதிநாயகம் நூல் வெளியீட்டு விழா அச்சிடுக
வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011 19:47
பாசன மேலாண்மை வல்லுநர் திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை, ஊடகவியலாளர் திரு மு. பாண்டியராஜன் அவர்களின் சீரிய முயற்சியால், 'தாமிரவருணி - சமூக - பொருளியல் மாற்றங்கள்' என்ற தலைப்பில் நூலாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29-12-2011 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நாள் : 29-12-2011, வியாழக் கிழமை
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணா சாலை, சென்னை. (டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் அருகில்)
நேரம் : மாலை 5 : 30 மணி
பங்கேற்போர் :
திரு. நல்லகண்ணு
திரு. வைகோ
திரு. பழ. நெடுமாறன்