நல்லகண்ணு மீது வழக்கு- அரசு தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமதிப்பு அச்சிடுக
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:58

தமிழ்நாட்டின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் எத்தகைய வேறுபாடும் இன்றி அனைத்துத் தமிழ் மக்களாலும் மதித்துப் போற்றப்படும் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள்  உழவர்களின் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார் என்பதற்காக தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தூய்மை, தியாகம், தொண்டு ஆகியவற்றின் வடிவமாகத் திகழும் தலைவர்  இரா. நல்லகண்ணு அவர்கள் மீது வழக்குத் தொடுத்ததின் மூலம் தமிழக அரசு தனக்குத் தானே அவமதிப்பைத் தேடிக்கொண்டிருக்கிறது. உடனடியாக அந்த வழக்கை  திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறோம்.