சென்னை சா. கணேசன் காலமானார் அச்சிடுக
புதன்கிழமை, 16 மே 2018 12:53

சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், சிறந்த பண்பாளருமான இனிய நண்பர் சா. கணேசன்  அவர்கள் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.
கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைவருடனும் நெருங்கிப் பழகி நட்புறவு கொண்டாடியவர்.

இன்னார் இனியர்  எனக் கருதாது யாராக இருந்தாலும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியவர். இலக்கியப் படைப்பாளர்கள் அனைவருக்கும் நெருக்கமானவர். எளிமை, இனிமை, திறமை ஆகிய நற்பண்புகளுடன் மக்களுக்குத் தொண்டாற்றினார்.
அவரின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும்.
                                                                  - ஆசிரியர்