உலக மகளிர் நாள் நிகழ்ச்சி - திருச்சியில் கருத்தரங்கம் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:26

12.03.2022 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி சுமங்கலி மகாலில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சிக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

“மதவாத அரசியலும் – பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் இ. அங்கயற்கண்ணி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மோ. பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் கருத்தரங்கினைத் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி மற்றும் வழக்கறிஞர்கள் பெ. தமயந்தி, ஆ. விசயலெட்சுமி, செ. கனிமொழி, ஜெ. சுதா, நா. பாரதி ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர்கள் கு. அபிராமி, பா. தீபிகா, கா. கனிமொழி, பி. சங்கீதா, தீபா கணேஷ், இ. தினேஷ் தீபா ஆகியோர் தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினர்.

இறுதியாக பழ. நெடுமாறன் நிறைவுப் பேருரையாற்றினார். வழக்கறிஞர் ஆ. லியோ பொட்டுமணி நன்றியுரை கூறினார்.