ஹைட்ரோ கார்பன் அபாயம் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:02

கா. அய்யநாதன் எழுதிய "ஹைட்ரோகார்பன் அபாயம்' என்னும் நூல் வெளியீட்டு விழா 7&10&17 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். நீதிநாயகம் து.அரிபரந்தாமன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

மரு. பாரதிசெல்வன், நல்லதுரை, சரவணன், கி. நாகராஜன், செந்தில்தாஸ், திருமுருகன், மொகமது ரபீக், ராஜராஜன், சங்கர், விஜய் ஆனந்த், செல்வ. ஸ்டாலின், அங்கதன்,  தசரதன், ஜீவா, மு. கலையரசி ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

சிக்கலும் தீர்வும் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வைகோ, ஜவகிருல்லாஹ், பாலசந்திரன், ஜென்ராம், நல்லதுரை ஆகியோர் உரையாற்றினர்.
வளர்ச்சியா- வீழ்ச்சியா- என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பெ. மணியரசன் தலைமை தாங்கினார். லெனின், சுந்தர்ராஜன், பாரதிசெல்வன் உட்பட பலர்  உரையாற்றினர். கா. அய்யநாதன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.