பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:46

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உழவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி நடத்த இருக்கிற பந்த் போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

மிகக் கடுமையான குளிர் காலத்தில் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை மன உறுதியுடன் தொடர்ந்து நடத்திவரும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உழவர்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும்படி நாடெங்கிலும் உள்ள உழவர் அமைப்புகளை வேண்டிக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.