செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:38 |
உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் ச. சந்திரேசன் அவர்களின் துணைவியார் ச. மலர்கொடி 15-3-2017 அன்று காலமான செய்தி அறிய மிக வருந்துகிறோம்.
பழ. நெடுமாறன் உட்பட பல அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் திரளாகக் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கை துணை நலத்தை இழந்து தவிக்கும் திரு. சந்திரேசன் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். - ஆசிரியர் |