விழுப்புரம் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:33


16 .6 .2012 காரிக்கிழமை (சனி) விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த அய்யா பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழிளைஞர் கூட்டமைப்பு எழில்.இளங்கோ தலைமையேற்றார் தமிழர் தேசிய இயக்கம் கா.தமிழ்வேங்கை வரவேற்றார்.

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் பார்வதி அம்மாள் பெற்றுக்கொண்டார். விழாவில் ம.தி.மு.க. மாநில பொருளாளர் மரு.இரா.மாசிலாமணி, ம.தி.மு.க. மாநில அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் , வழக்கறிஞர் பா. குப்பன், வழக்கறிஞர் கெ.கணேசன், பத்திரிகையாளர் பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார்.

தமிழிளைஞர் கூட்டமைப்பு லலித்.க.குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.