கடிதம் : 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' |
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:46 |
'தென் ஆசிய செய்தி' இதழில் வெளிவந்த 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' என்ற கட்டுரையை எழுதிய பூங்குழலி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கயமை நோக்குடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழினி புத்தகம் தொடர்பாக மிகச் சிறப்பான திறனாய்வுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அனைத்து தமிழர்களும் படித்து உணர வேண்டியதாகும். வஞ்சகத்தை வேரறுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது.
இவண்
பொன். மாறன், பொருளியல் உரிமை, 4/111,எல். ஜி. நகர். நாகமலை, மதுரை 625 019
|
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |