|
பேராசிரியர் பத்மானந்தன் மறைவு! |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:38 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
என வள்ளுவப் பேராசான் வடித்த இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாக கடந்த 60 ஆண்டு காலத்தில் உள்ளன்போடும் அகத்தின் மலர்ச்சியோடும் நட்புறவு கொண்டிருந்த எனது இனிய நண்பர் பேராசிரியர் இரா. பத்மானந்தன் 26-7-2017 அன்று காலமான செய்தியை அறிந்தபோது துயரத்தால் துடித்துப்போனேன்.
|
ஏமாற்றும் நாடகம் தொடர்கிறது - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:30 |
இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்பும் பின்புமாக காணாமல் போனவர்கள் குறித்த சட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறீசேனா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையில் நிலையான அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் 21-7-17 அன்று தெரிவித்துள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்ட பிறகே அதற்கு சிறீசேனா ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
வீர. சந்தானம் நினைவேந்தல் |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:36 |
தமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 31-7-17 அன்று சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இரா. நல்லகண்ணு தலைமை தாங்கினார். பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தினை வைகோ திறந்து வைத்தார். இயக்குநர் கெளதமன் தொகுப்புரை வழங்கினார். கவிஞர்கள் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், அறிவுமதி, தஞ்சாவூர்க் கவிராயர், பழனிபாரதி, யுகபாரதி, பச்சியப்பன், ஜெயபாஸ்கரன், இளையகம்பன், கவி பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.
|
"பெருந்தலைவரின் நிழலில்' நூல் அறிமுக விழா |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:27 |
23-7-17 ஞாயிறு அன்று மதுரை பால்மீனாஸ் மண்டபத்தில் "பெருந்தலைவரின் நிழலில்' நூல் அறிமுக விழா நடைபெற்றது. அனைவரையும் ச. பிச்சைக்கணபதி வரவேற்றார். வெ.ந. கணேசன் தொகுப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு டி.ஆர். சபாபதி தலைமை தாங்கினார். எம்.கே.டி பாலன், எம்.ஆர். மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரா. கு. வேலன் நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். முதல் நூலை எஸ்.கே. மோகன் பெற்றுக்கொண்டார்.
|
|
|
|
|
பக்கம் 84 - மொத்தம் 132 இல் |