|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:34 |
தொன்மையும், பெருமையும் மிக்க தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் 2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலையைப் போன்ற அவல நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. என்றென்றும் தமிழர்களால் நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறச் செய்யும் இந்நிகழ்ச்சியை நெக்குருக வைக்கும் ஆவண ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நண்பர் கா. அய்யநாதன் அவர்கள்.
சிறந்த ஊடகவியலாளராக தமிழர்களால் அறியப்பட்ட அய்யநாதன் அவர்கள் சிறந்த வரலாற்றாய்வாளராகவும் திகழ்கிறார் என்பதை இந்நூல் நிறுவுகிறது. தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியமான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ள இந்நூல் எதிர்காலத்தில் வரலாற்றுப் பெட்டகமாக நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
|
வள்ளலார் விதைத்தத் தமிழ்த் தேசியம் |
|
|
|
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:13 |
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நாடெங்கும் பரவியிருந்த காலத்தில் வள்ளலார் வாழ்ந்தார். வணிகம் நடத்திப் பிழைக்க வந்த ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி ஆளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்த சிற்றரசர்கள் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற பலர் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். இதைக்கண்டு அஞ்சிய ஏனைய சிற்றரசர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தார்கள்.
|
|
மாயமாக மறைந்த மலேசிய விமானம் 2 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறிய தமிழ் விஞ்ஞானி |
|
|
|
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:43 |
கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானம் இந்துமாக் கடலின் மீது பறந்த சென்றுகொண்டிருந்தபோது திடீரென மாயமாய் மறைந்துவிட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்பட பல வல்லரசுகள் விமானத்தைக் கண்டுபிடிக்கச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் டி.ஜெயப்பிரபு 2 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 31-5-2014 அன்று இந்த விமானம் எங்கு விழுந்தது என்று சரியாகக் கணித்துக் கூறினாரோ. அதே இடத்தில் இப்போது அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
|
சிங்களச் சிறையில் 7 ஆண்டு காலமாக வாடும் - தமிழக மீனவர்கள் |
|
|
|
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:10 |
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன், செண்பகம், நாகராஜ், அருண்குமார், சதீஷ் ஆகிய நான்கு பேரும் கடந்த 2007ஆம் ஆண்டு வழக்கம்போல மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதைப்போல செருது கிராமத்தைச் சேர்ந்த, சிவசுப்பிரமணியன், தென்பாதியைச் சேர்ந்த பாலகிருட்டிணன், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த குப்புசாமி, சீர்காழியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, கடலூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய ஐந்து பேரும் 2008ஆம் ஆண்டு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
|
|
|
|
|
பக்கம் 109 - மொத்தம் 117 இல் |