தென்செய்தி
வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு? - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 04 மே 2016 22:15

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமிthamiliniழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

 
தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:14

ஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலமும் செய்ய முடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலைப் பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும், படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாத போது தனது இராணுவ நடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.

 
உலகத் தமிழர் பேரமைப்பு தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:09

தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 2016 சூலை 15, 16, 17
தனித்தமிழ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூத்த தமிழறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படும்.
தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 
பேரறிவாளன்-இரவிச்சந்திரன் உடல் நலம் பாதிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:12

இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், இரவிச்சந்திரன் ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை.

 
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைச் சுற்றுப் பயணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 11:53

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைச் சுற்றுப் பயணம்

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 103 - மொத்தம் 112 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.