தென்செய்தி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:03

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு
நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்
வ.எண். பெயர் தொகை
0048 இராமநாதன், இலண்டன். 5,000
0049 வி. ரவிக்குமார், தம்மனூர். 5,000
800 யோ. செபறெட்ணம், இலண்டன். 1,000
801 ஜோதீஸ்வரன், பிரான்ஸ். 1,000
802 சிறீதரன் - சிறீகந்தராசா 1,000

 
தமிழ்த் தேசியம் எதிர்நோக்கும் அறைகூவல்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:32

மொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியச் செழுமை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பல நாடுகளைக் கொண்டதே இந்தியத் துணைக்கண்டம் என்ற உண்மையை மறைத்து ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, அதுதான் பாரதம் என்ற ஒரு மாயையைத் திணிக்கும் போக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

 
எனது பேராசிரியர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 13:40

நான் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையில் இடைநிலைப் படிப்பை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினேன். அப்போது அதற்கான வசதி சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை யிலுள்ள சில கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மட்டுமே இருந்தன. 1957ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., (ஹானர்ஸ்) படித்தேன். தமிழ் இலக்கியத் தேனை சுவைபட வாரி வழங்கி எனக்கு தமிழறிவு ஊட்டிய பேராசிரியர்கள் குறித்த பசுமையான நினைவுகளை நன்றியோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 
தமிழ்த் தானைத் தளபதி தமிழண்ணல் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:20

முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

 
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:42

வள்ளலார், "ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே' என்று இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாடினார். அவ்வாறு இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இந்தத் தமிழுலகம் உள்ளதனை உள்ளபடி உணர இது உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன்.

உண்மையில் தீர்ப்பினை மேலெழுந்தவாரியாக நோக்கினால் குழப்பம் வருவது இயற்கைதான். எதனால் இந்தக் குழப்பம் நேர்கிறது? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணையை தீர்ப்பு ரத்து செய்யவில்லை. ஆனால்கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. இங்கே தான் பலரும் குழப்பம் அடைகிறார்கள். என்ன காரணம் என்றால் ஆகம விதிப்படிதான் நியமனம் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் அதாவது பிராமணர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றல்லவா பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள்.

 
«தொடக்கம்முன்111112113114115116117118119அடுத்ததுமுடிவு»

பக்கம் 117 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.