தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
மறைவு - செய்தி ருசிய தமிழறிஞர் அலெக்சாண்டர் எம். துபியான்சுகி காலமானார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 நவம்பர் 2020 11:41

AlexanderDubyanskyஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…. 1941ஆம் ஆண்டு பிறந்த முனைவர் அலெக்சாண்டர் எம். துபியான்சுகி, 1970இல் கீழை நாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ்மொழியில் சிறந்த புலமைப் பெற்றவர். தமிழை சரளமாகப் பேசக் கூடியவர்.

 

 
சிதைக்கப்பட்டு உருமாறிய அரசியல் சட்டம் பயன்படாது தன்னுரிமையை ஏற்கும் புதிய அரசியல் சட்டம் வேண்டும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 நவம்பர் 2020 12:09

இந்தியாவில் அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டபோது, நாடு விடுதலை பெறவில்லை. 1946ஆம் ஆண்டில் பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்து, காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் பல கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விளைவாக எடுக்கப்பட்ட பல முடிவுகளில் அரசியல் யாப்பு அவை அமைப்பதும் ஒன்றாகும்.

 
உழவுத் தொழிலில் தனியார் பெரு நிறுவனங்கள் - பால் தொழில் வரலாற்றிலிருந்து பாடம் கற்போம் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:02

பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது.
தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து
என்ற முல்லைக் கலிப் பாடலைப் போன்ற சங்க கால முல்லை நிலப் பாடல்கள் தொடங்கி தமிழர்கள் பசு வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் ஈடுபட்ட செய்திகள் தமிழ் இலக்கியமெங்கும் விரவி கிடக்கின்றன. உழவுச் சமூகமான தமிழர் சமூகத்தில் பசு வளர்ப்பு என்பது வாழ்வியலின் முக்கியமான ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது.

 
ஆளுநரா? நடுவண் அரசின் ஏவலரா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:03

தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் கடத்தி வருகிறார். ஏறத்தாழ ஒரு மாதம் கடந்த பிறகு அக்டோபர் 23-ஆம் தேதி அன்று ஆளுநர் பின் வருமாறு அறிவித்திருக்கிறார்.

 

 
திருமுறைக் காவலர் தங்க. விசுவநாதன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:01

Viswanthanஇனிய நண்பர் ஈரோடு திரு. தங்க. விசுவநாதன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அளவற்றத் துயரம் அடைந்தேன். அரை நூற்றாண்டு காலமாக என்னுடைய பணிகள் யாவற்றிலும் தோள் கொடுத்துத் துணை நின்ற அருமைத் தோழரின் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அதிலும் உடனடியாக ஈரோடு சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக் கூட இயலாத காலச் சூழ்நிலை என்னை மிக வருந்த வைத்து விட்டது.

 

 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 41 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 114 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்