|
வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு? - பூங்குழலி |
|
|
|
புதன்கிழமை, 04 மே 2016 22:15 |
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமி ழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
|
திங்கட்கிழமை, 02 மே 2016 22:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
9 ஆண்டு காலமாக சிறப்பு முகாமில் வாடும் தமிழர்கள் விடுதலை செய்யுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:41 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
பொறுப்பான ஆளுங்கட்சியும் விழிப்பான எதிர்க்கட்சியும் தேவை - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:44 |
சென்னை மாகாண சட்டமன்றம் இந்தியாவில் உள்ள பிற மாகாணங்களின் சட்ட மன்றங்களுக்கு முன்மாதிரியாகவும் எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது. இச்சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல் பதவி வகித்தார். இச்சட்டமன்றத்தில் அமைச்சர்களாக இருந்த வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள் பிற்காலத்தில் குடியரசுத் தலைவர்களானார்கள். பின்னர் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவர் ஆனார்.
|
ஓவியக் கலையில் சாதனைப்படைத்த சந்தானம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:39 |
தமிழர்களின் எடுத்துக்காட்டாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொன்மையான யாழ் மற்றும் பஞ்சமுக வாத்தியம் போன்ற இசைக் கருவிகள், செட்டிநாட்டு சிற்ப வேலைப்பாடுகள், அழிந்து கொண்டிருக்கிற தோல்பாவை கூத்துக்களின் வடிவங்கள் ஆகியவற்றுடன் தமிழர்களின் அழிந்துவிட்ட, அழிககப்பட்டு வரும் மரபு சார்ந்த வண்ணங்களையும் அனைவரும் விரும்பும் வகையில் நவீன உத்திகளோடு ஓவியங்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஓவியர் வீர. சந்தானம். நடிகர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு திடீரென சுயநினைவற்று, ஒரு மாத காலம் கோமாவில் கிடந்தவர் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையமான "தக்ஷின் சித்ரா' இவரைப்பற்றி "காமதேனு' என்ற குறும்படத்தை தயாரித்ததுடன், இவரது படைப்புகளைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சி குறித்தும் - அவர் கடந்து வந்த வாழ்க்கை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
|
|
|
|
|
பக்கம் 123 - மொத்தம் 132 இல் |