தென்செய்தி
புண்ணுக்குப் புணுகு பூசும் வேலை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:11

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக் கழக கிளைகளையும் தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இதே முயற்சியில் ஈடுபட்டபோது இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் இப்போது பா.ஜ.க. அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதின் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகை தொழில் நுட்ப அல்லது தொழில்முறை கல்விக் கழகங்களை வணிக நிறுவனங்களாகவும் மாணவர்களை நுகர்வோர் களாகவும் மாற்றிவிடும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

 
இதயம் திறந்து பாருங்கள் - பேரறிவாளன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:08

மீண்டும் எங்கள் பிரச்சினையைத் தம் பிரச்சினையாகக் கருதி தமிழ்ச் சமூகம் பேச ஆரம்பித்திருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த மடலை எழுதத் தொடங்குகிறேன்.

எங்கள் விடுதலைக்காக இது நாள் வரை பேசிய பலரையும் டிசம்பர் 2 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்தச் சங்கடத்துக்கான காரணம் இதுதான்: இந்த விடுதலையை எந்த வகையில் சாத்தியப்படுத்துவது?

முக்கியமாக, இந்த விடுதலையைச் சாத்தியப் படுத்துவதற்கான அதிகாரம் இன்னமும் தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறதா?

இதற்கான தெளிவான, உறுதியான பதில்: ஆம்.

விடுதலைக்கான வழி என்ன?

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:03

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு
நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்
வ.எண். பெயர் தொகை
0048 இராமநாதன், இலண்டன். 5,000
0049 வி. ரவிக்குமார், தம்மனூர். 5,000
800 யோ. செபறெட்ணம், இலண்டன். 1,000
801 ஜோதீஸ்வரன், பிரான்ஸ். 1,000
802 சிறீதரன் - சிறீகந்தராசா 1,000

 
போராடி வென்ற பத்திரிகையாளர் "மிஸ்டர் கமலரத்னம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:06

பத்திரிகையாளர்கள் என்றால் யார் தெரியுமா? உடனடியாக இன்றே இந்தத் தொழில் தகராறு மீது நடவடிக்கை எடுங்கள்?''
இப்படிக் கூறியவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன்.

இது நிகழ்ந்தது மதுரை மாநகரில் அறுபதுகளின் தொடக்க நாட்கள் அவை.

பிற்காலத்தில் தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் பிரபலமான ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற திரு. கமலரத்னம் அந்நாட்களில் மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை அதிகாரியாக இருந்தார்.

 
தமிழ்த் தேசியம் எதிர்நோக்கும் அறைகூவல்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:32

மொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியச் செழுமை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பல நாடுகளைக் கொண்டதே இந்தியத் துணைக்கண்டம் என்ற உண்மையை மறைத்து ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, அதுதான் பாரதம் என்ற ஒரு மாயையைத் திணிக்கும் போக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

 
«தொடக்கம்முன்121122123124125126127128129130அடுத்ததுமுடிவு»

பக்கம் 129 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.