|
எனது பேராசிரியர்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 13:40 |
நான் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையில் இடைநிலைப் படிப்பை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினேன். அப்போது அதற்கான வசதி சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை யிலுள்ள சில கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மட்டுமே இருந்தன. 1957ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., (ஹானர்ஸ்) படித்தேன். தமிழ் இலக்கியத் தேனை சுவைபட வாரி வழங்கி எனக்கு தமிழறிவு ஊட்டிய பேராசிரியர்கள் குறித்த பசுமையான நினைவுகளை நன்றியோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
|
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
இளங்குமரன் தாயார் மறைவு பழ. நெடுமாறன் இரங்கல் செய்தி |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:32 |
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆரம்பக் காலத் தோழரும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராகப் பணியாற்றியவருமான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்னை செல்வநாயகி நடராசா அவர்கள் மறைந்த செய்தி அனைவருக்கும் வேதனை அளிக்கும் செய்தியாகும்.
தமிழீழம் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏழ்மையான அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தனது மூத்த மகன் இயக்கத் தொண்டாற்றி வருவதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது. போரின் முடிவில் இளங்குமரன் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். அவர் நிலை என்னாயிற்று என்பது தெரியாத துயரத்தோடு வாழ்ந்து வந்த அம்மையார் அந்த ஏக்கத்தோடு மறைந்திருக்கிறார். அந்த வீரத்தாய்க்கு தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். |
|
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:42 |
வள்ளலார், "ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே' என்று இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாடினார். அவ்வாறு இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இந்தத் தமிழுலகம் உள்ளதனை உள்ளபடி உணர இது உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன்.
உண்மையில் தீர்ப்பினை மேலெழுந்தவாரியாக நோக்கினால் குழப்பம் வருவது இயற்கைதான். எதனால் இந்தக் குழப்பம் நேர்கிறது? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணையை தீர்ப்பு ரத்து செய்யவில்லை. ஆனால்கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. இங்கே தான் பலரும் குழப்பம் அடைகிறார்கள். என்ன காரணம் என்றால் ஆகம விதிப்படிதான் நியமனம் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் அதாவது பிராமணர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றல்லவா பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள்.
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:29 |
"தமிழீழம் அமையும் வரை சட்டை போடமாட்டேன்'' என்று சூளுரைத்து கடந்த 20 ஆண்டு காலமாக சட்டையில்லாமல் வாழ்ந்து வந்த தோழர் உண்மை விரும்பி அவர்கள் 25-12-2015 அன்று கோவூரில் காலமானார் என்ற செய்தியை அறிய மிக வருந்துகிறோம்.
|
|
|
|
|
பக்கம் 130 - மொத்தம் 132 இல் |