இராசபக்சேயின் பின்னணியில் சீனா -பழ. நெடுமாறன் - |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 12:35 |
சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய பதவியைவிட்டு விலகியதோடு, நாட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார்.
|
|
தமிழர் தேசிய முன்னணி - செயல்வீரர் பயிற்சி முகாம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:48 |
தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் செயல்வீரர் பயிற்சி முகாம் 03.07.22 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
|
இசைத் தமிழுக்குப் பெருமை தந்த இளையராசா |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:05 |
தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்ற சிற்றூரில் பிறந்து இசைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் இளையராசா என்றால் மிகையாகாது. இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 7ஆயிரம் பாடல்களுக்கு இசையின் மூலம் புது மெருகூட்டியவர் இவரே. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகள் பலவற்றிலும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமை இவருக்கு உண்டு.
|
|
புதிய குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:08 |
இந்தியாவின் 16ஆவது குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்கள் பதவியேற்றியிருக்கிறார். .அவருக்கு நமது வாழ்த்துக்கள் உரித்தாகுக.பழங்குடியினத்தின் மகள் ஒருவர் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டிற்கும் உரியதாகும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
ஆனால் இந்தியாவில் இன்று பல்வேறு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் நிலை என்ன? நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆயினும் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்க்கையில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. பழங்குடியினரைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்கள் செயலற்றுக் கிடக்கின்றன.
|
அரேபியர்களுக்குப் பரிவு காட்டும் பைடன் ஈழத் தமிழர்களுக்கும் பரிவு காட்டுவாரா? |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:01 |
பாலஸ்தீனத்தில் உள்ள பெத்தலகெம் நகர் இயேசுபிரான் பிறந்த மண்ணாகும். அதனால்தான் என்னவோ அமெரிக்க அதிபர் பைடன் அவர்களுக்கு அரேபிய மக்களின் அவலம் குறித்துக் கழிவிரக்கம் கொண்டிருக்கிறார். 2022 சூலை 28ஆம் நாள் அந்நகருக்குச் சென்ற பைடன் அவர்கள் பாலஸ்தீனியத் தலைவர் முகம்மது அப்பாஸ் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பின்வருமாறு கூறியுள்ளார்-
|
|
|
|
|
பக்கம் 18 - மொத்தம் 119 இல் |