தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழீழத்தை அடைவோம் என்ற உறுதியும் நம்பிக்கையும் நமக்கு தேவை - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:52

இன்று ஈழ மண் எமது என்று நாம் உரிமை கொண்டாடுவதற்கான அத்தனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி விரிவாக நான் சொல்லத் தேவையில்லை. செய்திகளில் நீங்களே படித்திருப்பீர்கள். உங்கள் உறவுகளின் ஊடாக அறிந்தும் இருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாக சென்று பார்த்தும் வந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன? செய்யக் கூடியது ஏதேனும் உள்ளதா? அதுவும் இத்தனை மைல்கள் தள்ளி நின்று நம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காணும் முன், அதாவது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முன், நாம் தீர்மானிக்க வேண்டியது நமது  செயல்கள் எதை நோக்கி இருக்க வேண்டும். அதாவது, நம் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்.

 
முள்ளிவாய்க்கால் முற்ற வைப்பு நிதி ரூ. 2கோடி திரட்ட முடிவு! உலகத் தமிழர் பேரமைப்பு - ஆட்சிக்குழுத் தீர்மானம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:46

27-11-2017 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சை - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றபோது  தலைவர் பழ. நெடுமாறன், துணைத்தலைவர்கள் ம.பொன்னிறைவன், பேரா. சி. இராமமூர்த்தி,  சா. இராமன், எஸ்.ஜி.கே. நிஜாமுதீன், செயலாளர் - நாயகம் ந.மு. தமிழ்மணி, செயலாளர்கள் எஸ். செளந்தரபாண்டியன், ஜோ. ஜான்கென்னடி, து. குபேந்திரன், பி. வரதராசன், மு. சந்திரன், அறக்கட்டளை உறுப்பினர்  வ. தீனதயாளன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சி. முருகேசன், எம்.ஆர். மாணிக்கம், தி.மா. பழனியாண்டி, பொன். வைத்தியநாதன், வைகறைவாணன், செ.ப. முத்தமிழ்மணி, பேரா. சிலம்பு நா. செல்வராசு, இரா. இளமுருகன்,  அருட்தந்தை பாலு, புலவர் இரத்தினவேல், க. தெய்வசிகாமணி, மறை. தி. தாயுமானவன், பேரா. த. மணி, கா. தமிழ்வேங்கை, மரு. கண்ணன், முனைவர் சு. தமிழ்வேலு, முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பே. லோகநாதன், சாமி. கரிகாலன், பா. இறையெழிலன், சுப. உதயகுமாரன், இரா. முரளிதரன், சி. அறிவுறுவோன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 
நூலகத்திற்கு ரூ. 25 இலட்சம் நன்கொடை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:42

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூலகம் அமைப்பதற்காக காரைக்குடி திரு. ச. இராமன் அவர்கள் ரூ. 25 இலட்சம் அளிக்க முன்வந்ததற்கு அவருக்கும்  மற்றும் நன்கொடை அளித்தவர்கள், அளிக்க வாக்குறுதி கூறியவர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உளகனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
அறுசுவை விருந்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:45

ஆட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மற்றும் மாலையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும், ஆட்சிக்குழு உறுப்பினர் காரைக்குடி திரு. எஸ்.டி. மனோகரன் அவர்கள் அறுசுவை விருந்தளித்தார். அவருக்கு நமது உளங்கனிந்த நன்றி.

 
தஞ்சையில் மாவீரர் நாள் - நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:40

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2017 அன்று மாலை 5 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகத்  தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டு பங்கேற்ற இந்நிகழ்ச்சி மாவீரர் சுடரை திருமதி. மோகனதாசு சாரதா தேவி ஏற்றி வைத்தார்.

இவரின் இரு புதல்வர்களான கரும்புலி சீராளன், சிறீதரன் ஆகியோர் மாவீரர்களானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தொடர்ந்து அனைவரும் சுடரை  ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

 
«தொடக்கம்முன்71727374757677787980அடுத்ததுமுடிவு»

பக்கம் 77 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 9 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்