தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
ஞானசேகரன் சாவுக்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:40

பொதுத்துறை வங்கியில் பெற்ற கடனை விவசாயி ஞானசேகரன் உரிய காலத்தில் திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காகக் குண்டர்களை ஏவி அவரின் சாவுக்குக் காரணமாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும், குண்டர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் வலியுறுத்தியும்கூட, இன்னமும் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மறைந்தவரின் குடும்பத்திற்கு உதவ முன்வர வேண்டியது தமிழக முதல்வரின் கடமையாகும். உடனடியாக அதை அவர் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 
மாநில ஆட்சிகள் தேவை இல்லை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:37

திட்டக்குழுவிற்கு மாற்றாக பா.ஜ.க. அரசினால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் என்னும் அமைப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்குத் பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் என்பவர் "வேளாண்மைத் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.'' என கூறியுள்ளார்.

 
இனப்படுகொலைக்குத் தீர்வு தனிநாடே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வ. கெளதமன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:31

"இனப்படுகொலைக்கு பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே” என்ற கூற்றிற்கு இணங்க இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசால் புரியப்படும் இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லலாக மட்டுமே இருக்க முடியும் என்பதே சரியானது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுத் தொன்மையைக் கொண்ட இலங்கையின் பூர்வகுடி மக்களான தமிழர்கள் செழிப்பான பண்பாட்டை கொண்டுள்ளதுடன் செம்மொழியான தமிழ் மொழியைத் தாய்மொழியாகவும், வளமான இலக்கிய செழுமையையும் கொண்ட வளா;ச்சியடைந்த தனித்தும் மிக்க தேசிய இனத்தவர்களாவர். இவர்கள் அரசமைப்புடன் கூடிய நீண்ட வரலாற்றை தம் தாயகமான தமிழீழத்தில் கொண்டவர்கள்.

 
"பெருந்தலைவரின் நிழலில்' நூல் மதிப்புரை வரலாற்றில் வாழ்தல் - பேரா. இரா. காமராசு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:33

மனிதன் வரலாற்றில் வாழ்கிறான். புதிய வரலாற்றைப் படைக்கிறான். வரலாற்று உணர்வு வளரும் சமூகத்தின் அச்சாணி. தனி மனிதர்கள் வரலாற்று மனிதர்களாக உருவாவதை தவிர்க்க முடியாது. மனிதர்கள், நிகழ்வுகள், முரண்கள், போராட்டங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய வளர்ச்சியின் கூறுகளே வரலாற்றுக் காரணிகளாகத் திகழும், அவ்வகையில் வாழ்க்கை வரலாறுகள், தன் வரலாறுகள் போன்றன சமூக வரலாற்று உருவாக்கத்துக்குத் தரவுகளாக அமையும்.

 
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு மூலமே தீர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:29

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
காஷ்மீர் பிரச்சினையை படை வலிமை கொண்டு தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற உளவுத்துறைத் தலைவரை சிறப்புப் பிரதிநிதியாக இந்திய அரசு நியமித்துள்ளது. ஆனால், இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

 
«தொடக்கம்முன்71727374757677787980அடுத்ததுமுடிவு»

பக்கம் 79 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 34 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்