தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
பாசமறுத்த பெருந்தலைவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:26

அன்னை சிவகாமி அம்மையார் மரணப் படுக்கையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துத் தலைவர் காமராசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து காரில் விருதுநகர் பயணமானார். பெற்றதாய் நமனின் பிடியிலே சிக்கித் தவிக்கிற அந்த நிலையிலும் அவரிடம் எவ்வித சலனமும் காணப்படவில்லை. உடன் பயணம் செய்த என்னிடம் அரசியல் பிரச்னைகள் குறித்துப் பேசிக்கொண்டே வருகிறார். எவ்விதப் பரபரப்போ பதட்டமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர் பேசிக்கொண்டே வந்தது கண்டு அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தேன்.

 
அன்னையைக் கவனிப்பாரில்லை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:23

காமராசர் முதலமைச்சரான பிறகு ஒருமுறை அன்னை சிவகாமி அவரைக் காண சென்னைக்கு வந்தார்கள் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கினார்கள். அங்கேதான் சாப்பிட்டார்கள். அவர்களுடைய காரிலேயே அந்தக் குடும்பத்தாருடன் ஏறிக்கொண்டு காமராசரைக் காண வந்தார்கள். ஆனால், காமராசர் வழக்கம் போல் வீட்டில் இல்லை.

அன்னை அவர்கள் மகனைக் காண ஆவலோடு எப்பொழுது வந்தாலும் அவர் வீட்டில் இருப்பது அபூர்வம்தான். வழக்கம்போல் அன்றும் அவர் வீட்டில் இல்லை சமையற்காரர் வைரவன் வந்த விருந்தாளிகளுக்கு காப்பிகூட கொடுக்கவில்லை. தன் மகனைக் காண தன்னுடனே வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன்னுடைய மகன் வீட்டிலேயே அதுவும் முதலமைச்சராக இருக்கும் போதே எவ்விதமான உபசாரமும் இல்லாததைக் கண்டு அன்னை சிவகாமியின் கண்களில் கண்ணீர் மல்கிற்று!

 
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட மணவை முஸ்தபா - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:17

"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவுங் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்க் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்''
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ'' என தமிழ்த்தாய் மனம்நொந்து கூறுவதாகப் பாரதி பாடி வருந்தினான். தமிழுக்கு ஏற்பட்ட இந்த வசையை நீக்க உறுதிபூண்டு தொண்டாற்றி வெற்றிகண்ட பெருமைக்குரிய அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா மறைந்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
இலங்கை கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:21

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் வேட்கை மற்றும் அவர்கள் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் என்ற மகுடத்திலான 2வது பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர். சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ''எழுக தமிழ்' முதலாவது பேரணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் மயிலாடுதுறையில் பழ. நெடுமாறன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 16:05

"வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்'' என்றார் தமிழர்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் 25-11-16 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற, தமிழக திருநாள் 60 பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 94 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 24 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்