|
வேலி தாண்டும் வெள்ளாடுகள்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
மேய்ப்பவன் சிறிது அயர்ந்தால் வெள்ளாடுகள் வேலியைத் தாண்டி வயலுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடும். இப்போது தமிழகத்தில் இதுதான் நடந்துள்ளது. மணல் கொள்ளையில் தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் தங்கக் கட்டிகள், கட்டு கட்டாகப் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை யிட்டிருக்கிறார்கள்.
|
மொழி, இனம், நாடு, சமயம் கடந்த நூல் திருக்குறளே மதுரை திருவள்ளுவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழாவில் பழ.நெடுமாறன் பேச்சு |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
மதுரை திருவள்ளுவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழா மதுரையில் மிகச்சிறப்பாக சனவரி 14 முதல் 18 வரை நடைபெற்றது. சனவரி 18ஆம் நாள் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு பொ.தி.ரா. கலை விசயராசன் தலைமை தாங்கினார். கழக ஆட்சித் தலைவர் முனைவர் இராம. பாண்டுரங்கன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் பழ.நெடுமாறன், சுந்தர.மோகன்காந்தி, தா.இரா. தினகரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
|
|
பொங்கல் பெருநாள் தமிழர் திருநாள் - பேரா. மு. அறிவரசன் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
பழங்காலத்தில் தமிழரின் தொடர் ஆண்டாகக் கலி - ஆண்டு நடைமுறையில் இருந்தது. தமிழர் தாயகத்தின் கல்வெட்டுக்களில் கலி - ஆண்டு பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. ஈழத்தமிழரிடையே இன்றும் கலி - ஆண்டு நடைமுறையில் இருக்கிறது.
|
காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்! |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
சல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து சென்னை முதல் குமரி முனை வரை நடத்திய போராட்டம் இதுவரை தமிழகம் காணாத போராட்டம் ஆகும்.
மிகுந்தக் கட்டுப்பாட்டுடனும் அமைதியாகவும் எத்தகைய வன்முறைக்கும் இடமளிக்காமலும் மாணவர்கள் நடத்திய போராட்டம் ஒருவார காலம் வரை அனைவருமே பாராட்டும் வகையில் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 95 - மொத்தம் 132 இல் |