தென்செய்தி
பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:46

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உழவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி நடத்த இருக்கிற பந்த் போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

 
திருமண விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:44

மணமக்கள்:

லீலா சிறீநிதி - கபாலீசுவரன்

Shreenithi

மதுரை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் மா. பழநியப்பன் – காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மீனா பிரியதர்சினி இணையரின் அருமை மகள் லீலா சிறீநிதி, நெல்லை மு. சொர்ணகுமார் – விநாயக சண்முக சுந்தரி இணையரின் அருமை மகன் சொ. கபாலீசுவரன் ஆகியோரின் திருமண விழா 26-11-20 அன்று மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற வரவேற்பிலும், 28-11-20 அன்று நடைபெற்ற மருத்துவர்களுக்கான வரவேற்பிலும் திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2020 11:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 நவம்பர் 2020 12:09

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக் களத்தில் நிறுத்தி ஈகத்தின் வடிவமாகி மறைந்து போனார்கள்.

 
ஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்களின் படிப்பு பாழாகும்! இந்திய அரசுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 15:32

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததை இந்திய அரசு நிறுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
மறைவு - செய்தி ருசிய தமிழறிஞர் அலெக்சாண்டர் எம். துபியான்சுகி காலமானார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 நவம்பர் 2020 11:41

AlexanderDubyanskyஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…. 1941ஆம் ஆண்டு பிறந்த முனைவர் அலெக்சாண்டர் எம். துபியான்சுகி, 1970இல் கீழை நாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ்மொழியில் சிறந்த புலமைப் பெற்றவர். தமிழை சரளமாகப் பேசக் கூடியவர்.

 

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2020 11:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்41424344454647484950அடுத்ததுமுடிவு»

பக்கம் 50 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.