|
குமரிக் கரையில் கதறும் குடும்பங்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 12:02 |
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ளது. இக்கடற்கரை நெடுகிலும் 308 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. கடல் சார் மீன்பிடித்தலில் நான்காவது இடத்தையும் (12.9%) உள்நாட்டு மீன் பிடித்தலில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழகத்தில் 5,180 ச.கி.மீட்டர் பரப்பில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மண்டபம், கன்னியாகுமரி போன்றவை முக்கிய மீன்பிடித் துறைமுகங்களாகும். தமிழ்நாட்டில் இராமேசுவரம் முதல் ஆந்திர மாநிலத்தின் கஞ்சம் வரையிலும், ஜüலை முதல் அக்டோபர் வரையிலும் மீன்பிடிக் காலமாகவும், சோழ மண்டலக் கரையில் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை மீன்பிடிக் காலமாகவும் உள்ளது.
|
கவிஞர் இன்குலாபின் "ஒளவை' நாடகம் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:54 |
கவிஞர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேராசிரியர் அ. மங்கையின் இயக்கத்தில் இன்குலாபின் "ஒளவை' நாடகம் மேடையேற்றப்பட்டது.
"புத்தி சொல்லும் எந்தப் பெண்ணும் எந்த வயதிலும் பாட்டிதான்'' என்ற ஒற்றை வாக்கியத்துடன், தமிழ்ச் சமூகத்தின் பொது மனத்தில் பதியவைத்து, ஒளவை பற்றி கற்பிக்கப்பட்டிருக்கும் ஒற்றைப்படிமத்தை கலைத்து, சங்க ஒளவையை இனக்குழுப் பண்பாட்டின் பெரும் துடிப்பும் விடுதலையும் கொண்ட பேராற்றலாய்ப் புதுப்பித்துக் காட்டும் அற்புதப் படைப்பு இந்நாடகம்.
|
|
முனைவர் மலையமானின் தமிழ் ஆய்வு முடிவுகள் |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:58 |
1. கந்தருவர் என்பவர் தேவர் இனத்தவர் என்பது தவறு. வடபுலத்தில் உலவிய தொல்பழம் யாழ்ப்பாணர்களே கந்தருவர். 2. ஆதிகாலத்து மாபெரும் வீரனாகிய முருகன் இறைவனாக வணங்கும் நிலையைப் பெற்றான். 3. தொடக்க நிலையில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்தன. பின்பு அது 31 எழுத்துகளைக் கொண்டதாகத் திட்டமிட்டு நிறுவப்பட்டது. குறில், நெடில், மெய் எழுத்தின் மூன்று இனங்கள் ஆகியவையும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. 4. மூன்று இன முக்கிய மெய் எழுத்துக்களுடன் (த், ம், ழ்) மூன்று முக்கிய உயிர் எழுத்துகளை (அ, இ, உ) இணைத்துத் "தமிழு' என்று மொழிக்குப் பெயர் சூட்டப்பட்டது. பின்பு இறுதி உகரம் மறைந்தது. தமிழ் என்று சொல் நிலைத்தது. 5. உலக மொழிகளில் தமிழில் தான் ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ளன (64 சொற்கள்).
|
மறைக்கப்படும் உண்மைகள் - ஆர். நல்லகண்ணு |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:48 |
மூன்றாண்டுகளாக மழையில்லாமல் கடும் வறட்சியில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. 146 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டுப் போதுமான நிவாரணப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. நாடு விடுதலையடைந்து, எழுபதாண்டுகளில் வறட்சி காலத்தில் தமிழக மக்கள் குடிதண்ணீருக்குக்கூட வழியில்லாமல் திண்டாடியது இல்லை. உடைக்கப்பட்ட பாறைக்குழிகளில் தேங்கிக்கிடந்த தண்ணீரை சென்னை மாநகர மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுமையும் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 84 - மொத்தம் 132 இல் |