தென்செய்தி
யாழ்-கண்டிராத மாபெரும் "எழுக தமிழ்ப் பேரணி' PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:04

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் 24-09-16 அன்று மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

 
படையை அனுப்பி அணையைத் திறக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:59

2007ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதிருந்த காங்கிரசு அரசும் இப்போதுள்ள பா.ஜ.க. அரசும் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை.

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
பத்திரிகைகள் பாராட்டுகின்றன! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:55

தினமணி 22-8-2016

திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மீகவாதியாக மிகப்பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனிதநேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருககிறார் பழ.நெடுமாறன்.

 
ஒருமுறைக்கு இருமுறை படிக்க வேண்டிய மலர்-தினமணி பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:57

தனித்தமிழ் இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போதுதான் அது காலத்தின் கட்டாயம். சமஸ்கிருதத்தின் பிடியிலிருந்து தமிழை மீட்கவும், மணிப்பிரவாள நடையை மாற்றித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர் மறைமலை அடிகள். இன்று ஆங்கில மயமாகிவிட்டிருக்கும் காலகட்டத்தில், மீண்டும் தமிழை அரியணை ஏற்றுகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் தமிழில் பேசி நமது தாய் மொழியைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 
பொறுத்தோம்! காவிரி ஆள்வோம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:12

காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். 

2007ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. 9 ஆண்டு காலமாக அதைச் செயல்படுத்த மத்திய அரசு முன்வராத காரணத்தினால் தமிழக விவசாயிகள் சொல்லொணாத இழப்பிற்கும் துன்பங்களுக்கும் ஆளானார்கள். அவர்கள் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களும் பல கொடுமைகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளானார்கள். எனவே இந்தத் தீர்ப்பை மதித்து உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 
«தொடக்கம்முன்111112113114115116117118119120அடுத்ததுமுடிவு»

பக்கம் 112 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.