தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
கடிதம் : 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:46

'தென் ஆசிய செய்தி' இதழில் வெளிவந்த 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு?' என்ற கட்டுரையை எழுதிய பூங்குழலி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கயமை நோக்குடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழினி புத்தகம் தொடர்பாக மிகச் சிறப்பான திறனாய்வுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அனைத்து தமிழர்களும் படித்து உணர வேண்டியதாகும். வஞ்சகத்தை வேரறுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது.

 
'தேசம்' வடசொல்லே - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:40

பாண்டியர் செப்பேடு, பல்லவர் செப்பேடு:

சீவரமங்கலச் செப்பேடு – மன்னன் - பராந்தக நெடுஞ்சடையன், கி.பி. 785 அதியமானின் தகடூர் நாட்டை வென்ற செய்தி - தகடூர் நாடு.

வீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடு பிராமணனுக்கு நிலதானம் -- வெள்ளத்தாயநாடு, புரத்தாயநாடு – மேல்வேம்புநாடு

 
நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:25

திருவள்ளுவரின் நெஞ்சம் - (மா. அர்த்தனாரி)

மனிதர்களின் அறிவுப் புதையலைத் திறந்து வைக்கும் சக்தி வாய்ந்த "மந்திரக்கோல்' திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பெருமையையும், சிறப்பையும் பெற்ற திருக்குறளுக்கு அன்றிலிருந்து இன்று வரை பல தமிழறிஞர்கள் பல உரைகளை தந்து கொண்டே உள்ளனர். அதில், புதிதாக ஏதோ உரை எழுதிவிடலாம் என்று எண்ணாமல் எளிதாக, புரியும்படியாக தெளிவாக உழைக்கும் வர்க்கத்தினர் வாசிப்பதற்கு ஏற்றாற்போல் நல்ல தமிழில், பொருள் விளங்க உரை எழுதியிருக்கும் அய்யா அர்த்தனாரி அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவராகிறார்.

 
தமிழீழ இனப்படுகொலை நாள் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:35

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழ இனப்படுகொலை 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 18/5/16 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசன், தஞ்சை. அ. இராமமூர்த்தி, பேரா. திருமாறன், சி. முருகேசன், வைத்தியநாதன், மரு. பாரதிசெல்வன், ஜான். கென்னடி, வீரசிங்கம், கும்பலிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

 
கேடாக முடிந்த நட்பு மீண்டும் கூடியது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:26

2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசைக் குற்றம் சாட்டி "கூடா நட்பு கேடு தரும்'' என்று கூறி காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் தி.மு.க. விலகியது.

இரண்டாண்டுகள் கழிவதற்குள் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடா நட்பு மீண்டும் கூடிய நட்பாக மாறிவிட்டது.

 
«தொடக்கம்முன்111112113114115116117118119120அடுத்ததுமுடிவு»

பக்கம் 111 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 19 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்