|
மலையகத் தமிழர் கேட்பது சமஉரிமையே-வீடு அல்ல! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 31 மே 2017 14:21 |
அண்மையில் இலங்கை சென்ற பிரதமர் மோடி அவர்கள் மலையகத் தமிழர்கள் கூட்டத்தில் பேசும்போது "உங்களது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தனர். இந்த நேரத்தில் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனார் பாடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற பாடல்களை நினைவூட்டுகிறேன். ஒவ்வொரு ஊரும் உங்களது ஊரே. இலங்கையும் உங்களது ஊரே. இலங்கையில் வாழும் சிங்களர்கள்-தமிழர்கள் ஒற்றுமையின் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரான மலையகத் தமிழர்களின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்த இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் இந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும். மலையகத்தமிழர்களுக்கு ஏற்கெனவே 4 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும்'' எனக் கூறியுள்ளார்.
|
ஆற்று மணலும் மாற்று வழியும் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆற்றுப்படுகைகளில் உள்ள 38 மணல் குவாரிகளை மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் சிறிது காலத்திற்கு முன்பாக மூடப்பட்டுவிட்டன. ஆகமொத்தம் தமிழகத்தில் இயங்கி வந்த 225 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
|
|
தூத்துக்குடியில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா... |
|
|
|
புதன்கிழமை, 31 மே 2017 14:19 |
21-5-17 அன்று தூத்துக்குடி கைலாசு திருமண மண்டபத்தில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா தமிழ் அமைப்புகளின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை திரு.ச. அழகு வரவேற்றார்.
திரு. அ. திருச்சிற்றம்பலம் விளக்கேற்றிவைத்தார். தமிழர் தாயகம் இதழ் ஆசிரியர் பேரா. மு.செ. அறிவரசன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் ஈ. சங்கரநாராயணன் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்துரைத்தார்.
|
உலகப் பெருந்தமிழர் - இரா. செழியன் 95ஆவது பிறந்த நாள் விழா |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
தஞ்சை மாவட்டத் திருக்கண்ணபுரத்தில் 28.04.1923 அன்று இராசகோபால் - மீனாட்சிசுந்தரம் இணையர்க்குப் பிறந்தவர் இரா. செழியன் அவர்கள்.
1939ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் தங்கப் பதக்கம் வென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கணிதத் துறையில் 1944ஆம் ஆண்டு பி.எஸ்சி., ஆனர்சு படிப்பில் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இரா. செழியன் அவர்களும், அவரது அண்ணன் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் அறிஞர் அண்ணா மீது ஈடுபாடு கொண்டு, 1949ஆம் ஆண்டு அவர் தொடங்கிய தி.மு.க.வில் இணைந்தார்கள். அண்ணாவின் நம்பிக்கைக்குரியவராகவும், நெருக்கமானவராகவும் அவர் திகழ்ந்தார். அண்ணா நடத்திய திராவிட நாடு இதழிலும், இரா. நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழிலும் தமிழைப் பற்றியும், பண்டைத் தமிழர் பண்பாடு குறித்தும் செழியன் தொடர்ந்து எழுதினார்.
|
|
|
|
|
பக்கம் 98 - மொத்தம் 132 இல் |