தென்செய்தி
பா.ச.க.வின் உள்நாட்டுப் பயங்கரவாதம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:15

கடந்த சூன் 26ஆம் தேதி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப், இசுரேலிய தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தலைமையமைச்சர் மோடி நடத்திய பேச்சு வார்த்தைகளின்போது சர்வதேச பயங்கரவாதப் பிரச்சினை முக்கிய இடம் பெற்றது.

சூலை 7ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் தலைமையமைச்சர் மோடி பேசும் போது "சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரானக்  குரல் பலவீனமாக இருப்பது கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு உலக நாடுகள் கூடுதல் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயல்பட  வேண்டியது அவசியமாகும்'' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுப்பதற்காக 11 அம்ச செயல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
சித்திரவதைக்கெதிராக உள்நாட்டுச் சட்டம் இயற்றுக! அய்.நாவின் சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையை ஏற்புறுதி செய்க!! சித்திரவதைக்கெதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:01

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான அகில உலக ஆதரவு நாளாக ஜüன் 26ஐ ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து உளவியல் ரீதியாக தீர்வு பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முற்றுகைப்போராட்டக் கோரிக்கைகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:17

1. காவிரிப்படுகை உழவர்களின் வாழ்வை அழிக்காதே!

2002ஆம் ஆண்டிற்கு முன் தீர்ப்புகளை வழங்கிய நடுவர் மன்றங்களைத் தவிர காவிரி நடுவர் மன்றம் உட்பட அனைத்து நடுவர் மன்றங்களையும் கலைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதென இந்திய அரசு செய்துள்ள முடிவு காவிரிப் பாசன உழவர்களை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும்.

 
திருச்சியில்: தமிழ்த் தேசிய அமைப்புகளின் முற்றுகைப் போராட்டம் ஆயிரக்கணக்கானவர்கள் கைது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:20

தமிழக உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் நதிகளுக்கான ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, தமிழர்களின் மொழி உரிமையை நசுக்கும் வகையில் இந்தியை எல்லா வகையிலும் திணிப்பது, தமிழர்களின் தொன்மையான வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் மதுரை-கீழடி அகழாய்வை முடக்குவது போன்ற தமிழர் விரோத மனப்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து மத்திய மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஒன்று கூடி கடந்த 31/05/2017 அன்று காலை 10:00 மணியளவில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் திருச்சி வில்லியம் சாலையில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய அரசுக்கு எதிரான அழுத்தமான தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

 
நற்றமிழ்த் தேசியம் வெற்றிபெற... - பேராசிரியர் அறிவரசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 ஜூன் 2017 12:16

தெள்ளு தமிழைக் காப்பதற்கும்
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போல தமிழரெலாம்
வேற்றுமை மறந்து திட்டமிட்டுக்
கொள்கை வழியில் ஒன்றுபட்டுக்
குறிக்கோள் வெல்லச் செயற்படுவோம்.

சனிக்கிழமை, 24 ஜூன் 2017 12:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 96 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.