தென்செய்தி
மீண்டும் இந்தித் திணிப்பு - க. அனந்தகிருட்டிணன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:09

சமீபத்தல் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் 117 பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்தியாவில் வாழும் சரிபாதிக்கும் மேற்பட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது தனது வகுப்பு வாதத் தாக்குதலை மோடியின் பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கிறது.

சனிக்கிழமை, 24 ஜூன் 2017 12:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
குளச்சல் துறைமுகத் திட்டம் கைவிடப்படுகிறதா? பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:07

இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக கிழக்கு முனையத்தை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டித் தர இந்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே அறிவித்துள்ளார். தில்லியில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியபின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
இந்துத்துவா வழிகாட்டி கீதை ராகுலுக்கும் அதுவே வழிகாட்டி! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 11:48

"ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய அமைப்புகளை எதிர்த்துப் போராட பகவத் கீதையை நான் படித்து வருகிறேன். அது காட்டும் வழியில் இவர்களை வீழ்த்தும் வழியைக் கண்டறிவேன்'' என காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்துத்துவா வாதிகள் தங்களுக்கு வழிகாட்டும் நூலாக கீதையைக் கொண்டிருக்கிறார்கள். அதே கீதையை தனக்கும் வழிகாட்டும் நூலாக ராகுல் காந்தியும் கொள்ளப்போவது நகைப்புக்குரியது.

 
உலகப் பெருந்தமிழர் இரா.செழியன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 11:52

மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவு கூரப்படும். நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற சனநாயகப் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிநாயகம் ஜெ.சி. ஷா ஆணையம் அளித்த அறிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை துணிந்து அச்சிட்டு வெளியிட்ட பெருமை இரா. செழியன் அவர்களையே சாரும்.

 
தனிமைப்படுத்தப்பட்டுத் தவிக்கும் இந்தியா! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:30

"இலங்கைக்கு உற்ற நண்பனாகவும், உண்மையான கூட்டாளியாகவும் இந்தியா என்றென்றும் விளங்கும். இலங்கையில் உள்ள நமது சகோதரர்களும் சகோதரிகளும் வளமான வாழ்வுபெறவும், முன்னேறிச் செல்லவும் தேவையான பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு இந்தியா உறுதியாக உதவும்.'' என இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மே 12 அன்று கொழும்பில் கூடியிருந்த பெருங்கூட்டத்தில் வாக்குறுதி வழங்கினார்.

மூன்று நாட்கள் கழித்து மே 15ஆம் நாள் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட மாநாட்டில் பங்குபெற இந்தியா மறுத்துவிட்டது. தனது இறையாண்மையை சீனா மதிக்கவில்லை என இந்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால் இந்தியா பங்குபெற மறுத்த மாநாட்டில் இலங்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளது.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 97 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.