தென்செய்தி
ஒரு இலட்சம் பேர் திரண்டெழுந்த கனடா மாவீரர் தினம் - இயக்குநர் வ. கெளதமன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

இதே போன்று ஒரு உறைந்த மனோநிலையையோ, உணர்வு நிலையையோ இதற்குமுன்பு என் மனம் அடைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பனிகொட்டும் அதிகாலையில் அதுவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு பெரும் அரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அசைவற்று நின்றுகொண்டிருக்க, "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...'' பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் சிறுகச் சிறுக நெஞ்சம் விம்மி பாடல் வரிகளுக்கான காட்சிகள் விரிந்து போர்க்களமும், வீர மரணங்களும், நடுகல் (மாவீரர் கல்லறை) வழிபாடும் வந்து வந்து போய் இசை முடியும் நேரம் தளம் கட்டி நின்ற கண்ணீர் உடைந்து கொண்டு ஒவ்வொருவர் கன்னங்களிலும் உருண்டோடிக் கொண்டிருந்தது. நானும் எனது கண்களை துடைத்தபடியே மாவீரர்களின் படவரிசையினைப் பார்க்க அவர்கள் அத்தனைபேரும் அலங்கரிக்கப்பட்ட பூக்களுக்கிடையே என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைப்பார்த்து மட்டுமல்ல உலகத்திலுள்ள அத்தனைத் தமிழர்களையும் பார்த்து சிரிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். "இரண்டாயிரத்து ஒன்பது "மே' மாதம் வரை உறுதியோடு நாங்கள் போராடி உயிரை விட்டோமே அதற்குப் பின்பு எட்டு ஆண்டுகள் நீங்கள் தேசியத்திற்காக என்ன செய்தீர்கள்?'' என்று நாம் வெட்கப்பட்டு கூனிக்குறுக அவர்கள் கேள்வி கேட்பதாகத்தான் உணர்ந்தேன்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் மயிலாடுதுறையில் பழ. நெடுமாறன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 16:05

"வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்'' என்றார் தமிழர்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் 25-11-16 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற, தமிழக திருநாள் 60 பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
வேத மரபை மறுத்தவர் வள்ளலார் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

வள்ளலாரைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய போது முதலில் என்னை ஈர்த்த செய்தி, 1935-ஆம் ஆண்டு, அருட்பா-ஆறாம் திருமுறையிலிருந்து நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றன. அதைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார். வெளியிட்டது குடி அரசு பதிப்பகம். இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்னும் பெயரில் தனது குடிஅரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் இதனை வெளியிடுகிறார். இக்கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் குடிஅரசு பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு முக்கால் விலைக்கு வழங்கியிருக்கிறார் பெரியார். இது குறித்துக் குடிஅரசு பத்திரிகையில் அவ்வப்போது விளம்பரமும் செய்துள்ளார் பெரியார்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழனுக்குப் பெருமை சேர்த்திருக்கும் தமிழன் புலிட்சர் விருதுபெற்ற பழனிக்குமணன் பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் புகழாரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதை பெற்றதால் நெ. பழனிக்குமணன், தமிழனுக்குப் பெருமை சேர்த்த தமிழனாகிறார் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புலிட்சர் விருதுபெற்ற மதுரை மென்பொறியாளரும் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகனுமான நெ. பழனிக்குமணனுக்கு மதுரையில் 16-12-2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையுரையாற்றிப் பேசியது.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

2016ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவருக்கு நமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 106 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.