தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
சங்க கால நகர்ப்புற நாகரிக முதல் தடயம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:11

தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 
ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:06

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்குமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

 
படையை அனுப்பி அணையைத் திறக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:59

2007ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதிருந்த காங்கிரசு அரசும் இப்போதுள்ள பா.ஜ.க. அரசும் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை.

 
யாழ்-கண்டிராத மாபெரும் "எழுக தமிழ்ப் பேரணி' PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:04

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் 24-09-16 அன்று மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

 
ஒருமுறைக்கு இருமுறை படிக்க வேண்டிய மலர்-தினமணி பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:57

தனித்தமிழ் இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போதுதான் அது காலத்தின் கட்டாயம். சமஸ்கிருதத்தின் பிடியிலிருந்து தமிழை மீட்கவும், மணிப்பிரவாள நடையை மாற்றித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர் மறைமலை அடிகள். இன்று ஆங்கில மயமாகிவிட்டிருக்கும் காலகட்டத்தில், மீண்டும் தமிழை அரியணை ஏற்றுகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் தமிழில் பேசி நமது தாய் மொழியைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 102 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 24 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்